நிபா உறுதி செய்யப்பட்ட மலப்புரம் மாவட்டத்தில் 175 பேர் தொடர்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். புதுப்பிக்கப்பட்ட இந்த பட்டியலில் 74 பேர் சுகாதாரப் பணியாளர்களாவர். முதன்மை தொடர்பு பட்டியலில் 126 பேரும், இரண்டாம் நிலை தொடர்பு பட்டியலில் 49 பேரும் உள்ளதாகவும் நிலைமை முழு கட்டுப்பாட்டில் உள்ளதால் எவரும் அச்சமடையத் தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
பெரிந்தல்மன்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிபாவால் பாதிக் கப்பட்டு உயிரிழந்த இளைஞரின் உற வினர்கள் 10 பேருக்கு அறிகுறிகள் உள்ளன. அவர்கள் உட்பட மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 13 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. நிபா ஸ்டாண்டர்ட் ஆப்பரேட்டிங் புரோட்டோ கால் படி, 16 குழுக்கள் அமைக்கப்பட்டு, தடுப்புப் பணிகளை சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.
இளைஞருடன் 175 பேர் முதன்மை தொடர்பில் உள்ளனர். அவர்களில் 74 பேர் சுகாதாரப் பணியாளர்கள். இளைஞ ரின் பாதை வரைபடம் வெளியிடப்பட்டுள் ளது. இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்ற வர்களும் கண்காணிப்பில் உள்ளனர். மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் 30 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட வார்டு மற்றும் சளி பரிசோதனைக்காக நுண்ணுயிரியல் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. திரு வாலி ஊராட்சியில் 4, 5, 6, 7ஆவது வார்டு களிலும், மாம்பட்டு ஊராட்சியில் 7ஆவது வார்டிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன. மாவட்டத்தில் நிபா கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டது.
கடந்த செப். 9 அன்று பெங்களூரு வில் இருந்து வந்த வண்டூர் நடுவத்தைச் சேர்ந்த இருபத்திமூன்று வயதுடைய மாணவர் மூளைக்காய்ச்சல் அறிகுறி களுடன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரி ழந்தார். அது நிபாவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. செப்.15 ஞாயிறன்று புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் நிபா பரிசோதனை முடிவு கள் உறுதி செய்யப்பட்டன. முன்னதாக சனிக்கிழமையன்று கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த சோதனை முடிவுகள் நிபா தொற்றை உறுதி செய்தது.
பாதிக்கப்பட்ட பகுதிகள் முழு கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், யாரும் அச்சமடையத் தேவையில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.