states

img

மார்க்சிஸ்ட் கட்சியில் இணையும் காட்டாக்கடா ஆர்எஸ்எஸ் தலைவர்.... என்சிபி, காங்கிரஸ் நிர்வாகிகளும் இணைகின்றனர்...

திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவரும், ‘ஆர்ஷாகல்வி சங்கத்தின்’ காட்டாக்கடா தாலுகாவின் இணைச் செயலாளருமான வி.எஸ். விவேக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளார்.இவரைப் போலவே, தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) மாநிலக் குழு உறுப்பினரும், பரசலா தொகுதி செயலாளருமான தரணிதரன் நாயர், ஆர்எஸ்எஸ் தொழிற்சங்கப் பிரிவானபிஎம்எஸ்-ஸின் மோட்டார் தொழிலாளர் சங்க செயலாளர் டி. சுதன் மற்றும் காங்கிரஸ் தொகுதிச் செயலாளர் தாஜுதீன் ஆகியோரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளனர்.

இவர்களை சி.கே. ஹரீந்திரன் எம்எல்ஏ, வெள்ளரடா பகுதி செயலாளர் டி.கே. சசி மற்றும் ஒட்டசேகரமங்கலம் உள்ளூர் குழு செயலாளர் டி. சந்திரபாபு ஆகியோர் வரவேற்றனர். விளாப்பில் வெள்ளநாடு பகுதியிலும், காங்கிரஸ் மற்றும் பாஜக ஊழியர்கள் பலர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படமுடிவு செய்துள்ளனர். ஐடியா பாலுமற்றும் காங்கிரஸ் தலைவர் வினோத்தலைமையிலான பாஜக-வினர் வெள்ளநாடு பகுதியில் பாஜக-வை 45 ஆண்டுகளுக்கும் மேலாக
வழிநடத்தியவர்கள். இவர்கள் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். வெள்ளநாட் டில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியை சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆனாவூர் நாகப்பன் துவக்கி வைத்தார்.

;