states

img

மூணாறு நிலச்சரிவு; காணாமல் போனவரின் சடலம் மீட்பு

மூணாறு, நவ.13- மூணாறு குண்டலாவில் நடந்த நிலச்சரிவில் காணா மல் போன வடகரையைச் சேர்ந்த ரூபேஷ் (40) என்ப வரின் சடலம் ஞாயிறன்று  காலை கண்டெடுக்கப்பட் டது. குண்டலா புதுகடி அருகே மூணாறு டாப் ஸ்டே ஷன் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, வட கரையை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சென்ற டெம்போ  டிராவலர் நவம்பர் 12 சனி யன்று பிற்பகல் 3 மணியள வில் மண்ணில் புதையுண் டது. டாப் ஸ்டேஷனுக்குச் சென்று  விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள்  சென்ற மூன்று வாகனங்க ளில் முன்னால் சென்ற வாக னத்தின் மீது எதிர்பாராதவித மாக மண்சரிந்து விழுந்தது. அப்போது வாகனத்தில் இருந்தவர்கள் இறங்கி வாக னத்தை தள்ளும் போது மீண்  டும் மண் கொட்டியது. அப்  போது செல்பேசியை எடுக்க ரூபேஷ் வாகனத்தின் உள்ளே சென்றதாக உடன் இருந்த வர்கள் தெரிவித்துள்ளனர். வாகனம் சாலையில் இருந்து 500 மீட்டர் பள்ளத்  திற்கு அடித்து செல்லப்பட்  டது. மூணாறு காவல்துறை யினரும் தீயணைப்பு துறை யினரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடு பட்டனர். சனியன்று மதியம் அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. ஆகஸ்ட் 6ஆம் தேதி புதுக்கடையில் மண்  சரிவு ஏற்பட்ட இடத்தில்  இருந்து நூறு மீட்டர் தொலை வில் உள்ள வளைவில் சாலை  யில் மண் சரிவு ஏற்பட்டது. இவ்வழியாக நூற்றுக்க ணக்கான வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது மலை உச்சியில் இருந்து எதிர்பாராதவிதமாக கற்களும் மண்ணும் சாலை யில் விழுந்தது.போக்கு வரத்து முற்றிலும் தடை பட்டது. எல்லப்பெட்டி மேற்கு கோட்டத்திலும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. டாப் ஸ்டேஷனில் இருந்து மூணாறுக்கு போக்கு வரத்தும் பாதிக்கப்பட்டது. நிலச்சரிவு காரணமாக மூணா றில் இருந்து டாப் ஸ்டேஷன், வட்டவடா உள்ளிட்ட பகுதி களுக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.