திருவனந்தபுரம், மார்ச் 4 - ஒரு மாநிலத்துக்கு மார்ச் மாதத் தில் ஒன்றிய அரசு நிதி ஒதுக்காதது மாநில வரலாற்றிலேயே முதல் முறை என்று கேரள நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் தெரிவித்தார்.
ஒன்றிய அரசு கேரளத்திற்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்து நெருக்கடியை உருவாக்கி மக்களை பழி வாங்கி வருகிறது. இதுகுறித்து திங்களன்று (மார்ச் 4) செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் பாலகோபால் மேலும் கூறுகை யில், மாநிலம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையிலும், ஒன்றிய அரசு நிதி ஒதுக்காதது இதுவே முதல்முறை. நெருக்கடி இருந்தபோதிலும் சம்பளம் மற்றும் ஓய்வூதி யம் நிறுத்தப்படாது. வங்கி அமைப்பு செய லிழக்காமல் இருக்க, திரும்பப் பெறும் தொகையின் வரம்பு 50,000 என முடிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பளம் கொடுக்க கருவூலத்தில் பணம் இருக்கிறது. நல ஓய்வூதி யமும் வழங்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. அதனால்தான் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக் கள் தில்லி சென்று போராட்டம் நடத்தி னர். ஒன்றிய அரசிடம் இருந்து 14,000 கோடி ரூபாய் கிடைக்க வேண்டும். ஆனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டதால், அந்த பணத்தை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மாநிலத்துக்கு உரிமையான பணம் கோரப் படுகிறது. அதைத் தராமல் எவ்வளவு காலம்தான் ஒன்றிய அரசால் நிறுத்தி வைக்க முடியும்? கேரளத்துக்கு கிடைக்க வேண்டி யதில் மூன்றில் ஒரு பங்குகூட கிடைக்க வில்லை. அடுத்த விசாரணையில் உச்சநீதி மன்றம் கேரள அரசுக்கு சாதகமான நிலைப் பாட்டை எடுக்கும் என்று நம்புவதாக அமைச்சர் கூறினார்.