states

img

வீடுகளுக்குச் சென்று மக்கள் சந்திப்பு அமைச்சர் பி.ராஜீவ் பங்கேற்பு

கொச்சி, ஜன.14- தேசிய நெடுஞ்சாலை 66 பணியை 35 ஆண்டு கால இழுபறியில் இருந்து துவங்கி யதற்காக பரவூர் மக்கள் கேரள அரசுக்கு  நன்றி தெரிவித்தனர். கேரளத்தில் சிபிஎம்  நடத்தி வரும் மக்கள் சந்திப்பு இயக்  கத்தின் ஒரு பகுதியாக வீடுகளுக்குச் சென்ற சிபிஎம் மத்தியக் குழு உறுப்பி னரும் தொழில்துறை அமைச்சருமான பி.ராஜீவிடம் இதை தெரிவித்தனர். இந்த பணி 2025ஆம் ஆண்டு நிறைவடையும் என்று அமைச்சர் கூறினார். பல சவால்களை எதிர்கொண்ட கெயில்  திட்டத்தை நிறைவேற்ற முனைப்பு காட்டிய  முதல்வருக்கு நன்றி கூறுவதாக குழந்தை கள் நல மருத்துவர் பி.கே.குஞ்செரியா அமைச்சரிடம் தெரிவித்தார். பெண்களின் பாதுகாப்பு விசயத்தில் இன்னும் பய னுள்ள தலையீடுகள் இருக்க வேண்டும் என்று இல்லத்தரசி ஒருவர் கூறினார். பொடியக்காவ் அத்தாணி பகுதியில் சாலையில் அடிக்கடி குழாய்கள் உடைந்து செல்வதால் சிரமம் அடைவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். உடனடியாக பி.ராஜீவ் நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டினுடன் தொலை பேசியில் பேசினார். பணம் ஒதுக்கப் பட்டுள்ளதாகவும், பழைய குழாய்களை மாற்றி புதிய குழாய்கள் பதித்து பிரச்ச னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார். சிபிஎம்மின் இல்லப் பயணங்கள் மக்களைக் கேட்டு அறிந்தும், தற்போ தைய அரசியலை விளக்கியும் முன்னேறி வருகின்றன. மாநில அரசின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விளக்கவும், மேலும் மேம்படுத்த ஆலோசனைகள் கேட்கவும் வீடுகள்தோறும் வரும் தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரும் 21ஆம் தேதி வரை வீடு தேடி செல்  லும் இயக்கம் நடைபெறும்.