states

img

கேரளத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாதவிடாய்; மகப்பேறு விடுப்பு

திருவனந்தபுரம், ஜன.20- கேரள அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் படிக்கும் 18 வயதைக் கடந்த மாணவி களுக்கு அதிகபட்சமாக 60 நாட்கள்  வரை மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டுள்ள தாக உயர்கல்வி மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் டாக்டர் ஆர்.பிந்து தெரி வித்துள்ளார். மாணவிகளின் வருகை வரம்பு, மாத விடாய் கால விடுப்பு உட்பட 73 சதவீத மாக நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. பல்கலைக்கழக விதிகளில் தேவையான திருத்தங்களை மேற் கொள்ளுமாறு பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஒவ்வொரு செமஸ்டரிலும் மாண வர்கள் தேர்வு எழுத 75 சதவிகித வருகைப் பதிவு தேவை. ஆனால், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழ கம், மாதவிடாய்க் காலத்தைக் கருத்தில்  கொண்டு, 73 சதவிகித வருகைப் பதிவு இருந்தாலும், மாணவிகள் தேர்வெழுத லாம் என்ற சட்டத் திருத்தத்தை முதலில் கொண்டு வந்துள்ளது என அமைச்சர் டாக்டர். ஆர் பிந்து கூறினார்.