states

img

ஐஐடி கோட்டயம் - கேரள சைபர்டோம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஐஐடி கோட்டயமுடன் கேரள  காவல்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
சமீபத்தில் நடந்த விழாவில் பல்வேறு சைபர் மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த திட்டங்களை காவல்துறையுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில்  கோட்டயம் ஐஐடியுடன் கேரள காவல்துறையின் சைபர் டோம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. கோட்டயம் ஐஐடியின் பதிவாளர் எம்.ராதாகிருஷ்ணன், கேரள கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் மனோஜ் ஆப்ரகாம் மற்றும் சைபர் டோமின் நோடல் அதிகாரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது கோட்டயம் ஐஐடியில் உள்ள ஆராய்ச்சித் திட்டங்கள், சைபர் ஸ்பேசை மிகவும் பாதுகாப்பதோடு, அதன் இணைய பாதுகாப்பு பிரிவின் நிபுணத்துவத்திற்கும் பங்களிக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.