states

img

கேரள மீனவர்களுக்கு கடலிலும் அதிகபட்ச பாதுகாப்பு.... முதல் கட்டமாக 300 படகுகளுக்கு ஹாலோகிராம் பதிவு...

திருவனந்தபுரம்:
மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு கேரளத்தில் மீன்பிடி படகுகளில் தீவிர பாதுகாப்புக்காகவும் படகுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. படகுகளின் பாதுகாப்பு மற்றும் தொலைநிலை கண்காணிப்புக்காக இந்த திட்டம் உலகில் முதல் முறையாக கேரள மீன்வளத் துறையால் செயல்படுத்தப்படுகிறது.முதல் கட்டத்தில், 300 படகுகளில் ஹாலோகிராம் பதிவு விவரம் இணைக்கப்படும். நீண்டகரா, முனம்பம், கொச்சி ஆகிய இடங்களில் சுமார் 100 படகுகள் வீதம் பதிவு செய்யப்பட்டு இணைக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக 1500 படகுகளி லும், மூன்றாம் கட்டத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து மீன்பிடி படகுகளிலும் பதிவு செய்யப்பட்டதற்கான பலகைகள் பொருத்தப்படும். சிடிடியின் தொழில்நுட்ப உதவியுடன் இவை குறைந்த செலவில் நிறுவப்பட்டுள்ளன.

இது கடலில் உள்ள அனைத்து அச்சுறுத்தல் களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படாத படகுகளும் போலி பதிவுகள் உள்ள வர்களும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் எளிதில் கண்டறியலாம். போலி பதிவு எண் அடையாளம் காணப்படலாம். செயற்கைக்கோள் அடிப்படையிலான தகவல் தொடர்பு சாதனத்தைப் பயன்படுத்தி வரிசை எண்ணையும் சரிபார்க்கலாம்.

பாதுகாப்பு பதிவு பலகை
ஜிபிஎஸ்/ஜிபிஆர்எஸ் நெட்வொர்க்கிங் கொண்ட பாதுகாப்பு பதிவு பலகை என்பது ஆழ்கடலில் படகுகளை கண்டுபிடிக்க உதவும் ஒரு அமைப்பாகும். போலி பதிவுகளை கண்டறிய இதுஹாலோகிராபிக் மற்றும் லேசர் அமைப்புகளைக் கொண்டுள்ளது. இது படகின் வீல்ஹவுஸின்மேற்புறத்தில் இந்த பலகை இணைக்கப் பட்டுள்ளது. இது 360 டிகிரி தெளிவான பார்வையை உறுதி செய்கிறது. இது படகு மோதல் மற்றும் உப்பு நீர் காரணமாக பதிவு பலகைகளுக்கு சேதம் ஏற்படுவதைத் தவிர்க்கும். 

பாதுகாப்பு உறுதி செய்யப்படும்
ஒக்கி போன்ற இயற்கை பேரழிவுகளும் வெளிநாட்டு கப்பல்கள் மூலம் ஏற்படும் துயரங்களை எதிர்கொண்டு மீனவர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் ஒரு விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக ஹாலோகிராம் பதிவு பலகைகள் உள்ளன என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜே.மெர்சிக்குட்டியம்மா கூறினார். கடலுக்குச் செல்வோருக்கு பயோமெட்ரிக் அட்டை வழங்கப்படுகிறது. ஆனால் படகுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஹாலோகிராம் பதிவுவாரியம் உள்ளது. இது கடலில் உள்ள மீனவர்களுக்கு அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை ஒவ்வொரு கணமும் கரையில் இருந்து அறிந்து கொள்ள உதவும் என்றும் அமைச்சர் கூறினார்.

;