திருவனந்தபுரம், அக்.28- திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. மருத்துவக் கல்லூரிக்கு சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேரில் சென்று குழு உறுப்பினர்கள் அனை வருக்கும் வாழ்த்து தெரிவித்தார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட மலப்புரத்தை சேர்ந்த ஹெலன் குமார் (53), கல்லீரல் கொடுத்துள்ள சகோதரியின் கணவர் ஜான் (43) ஆகியோரை அமைச்சர் சந்தித்தார். ஹெலன் குமாரும் அவரது மனைவியும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அனைவருக்கும் கடமைப்பட்டிருப்பதாகவும் தெரி வித்துள்ளனர். அக்டோபர் 6 ஆம் தேதி மருத்துவக் கல்லூரியில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப் பட்டது.
ஹெலன் குமார், நாஷ் (NASH) என்கிற நோய் காரணமாக கல்லீரல் அழற்சி மற்றும் புற்றுநோயால் பாதிக்க ப்பட்டிருந்தார். அறுவைசிகிச்சைக்குப் பிறகு, நோயாளி மாற்று சிகிச்சை ஐசியுவில் கண்காணிக்கப்பட்டார். 20 நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு, ஹெலன் குமார் மற்றும் ஜான் உடல்நிலை திருப்திகரமாக இருந்த தால் வீடு திரும்பினர். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியிலும், கோட்ட யம் மருத்துவக் கல்லூரியிலும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் கூறினார். ஒவ்வொரு நிலையிலும் மருத்துவர்கள் ஆற்றி வரும் சேவைகளை அமைச்சர் பாராட்டினார். மருத்துவக் கல்வித் துறை இயக்குநர் டாக்டர். தாமஸ் மேத்யூ, முதல்வர் டாக்டர். காலகேசவன், மருத்துவமனை கண்காணிப்பாளர் நிசாருதீன், செவிலியர் அலுவலர் சபிதா, செவிலியர் கண்காணிப்பாளர் அனிதா மற்றும் அலுவலக பணி யாளர்கள் பணிகளை ஒருங்கிணைத்த னர். திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவ மனை மற்றும் எர்ணாகுளம் அமிர்தா மருத்துவமனையும் ஒத்துழைத்தன.