states

சட்டப் பேரவை புத்தகத் திருவிழா விற்பனை ரூ.7 கோடிக்கு மேல்

திருவனந்தபுரம், ஜன.23- கேரள சட்டப்பேரவை நூலக நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, கடந்த மாதம், சட்டப் பேரவைக் கட்டடத்தில், ஏழு நாட்களாக நடந்த சர்வதேச புத்தக திருவிழாவில், ஏழு கோடி ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் விற்பனையானதாக பேர வைத் தலைவர் ஏ.என்.ஷம்சீர் தெரி வித்தார். பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் மேலும் பேசியதாவது: பெரியதும் சிறியது மான அனைத்து பதிப்பகங்களும் பெருமள வில் புத்தகங்களை விற்பனை செய்ய  இக்கண்காட்சி உதவியுள்ளது. புத்தகத் திருவிழாவின் போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சட்டப் பேரவை க்கு வருகை தந்ததாகக் கணக்கிடப்பட்டுள் ளது. கண்காட்சிக்கு வந்த மாணவர்கள், சட்டமன்ற அருங்காட்சியகம், சட்டமன்ற அரங்கம் மற்றும் நேப்பியர் அருங்காட்சி யகம் மற்றும் உயிரியல் பூங்காவை இல வசமாக பார்வையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நாட்டின் சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியில் 88 பதிப்பா ளர்கள் கலந்துகொண்டனர். 124 அரங்கு கள் அமைக்கப்பட்டிருந்தன. இதையொட்டி நடந்த இலக்கிய விழா வில் சுமார் 200 முன்னணி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 95 நூல்கள் வெளி யிடப்பட்டன. கவியரங்கு, கலை விருந்து, கருத்தரங்கு, கதை சொல்லுதல், கவி மற்றும் குழந்தைகள் நிகழ்ச்சிகளும் நடை பெற்றன. மக்களுக்காக திறக்கப்பட்ட சட்டப்பேரவைக் கட்டிடத்தை சுமார் 3 லட்சம் பேர் பார்வையிட்டதாகவும் பேரவைத் தலைவர் கூறினார்.