கோழிக்கோடு கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் புஞ்சரி மட் டத்தில் கடந்த ஜூலை 30 அன்று கடுமையான அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச் சரிவால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி, அட்டமலை உள்ளிட்ட பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், புஞ்சரி மட்டம், அட்ட மலை கிராமங்கள் முழுமையாக அழிந்தன. அதே போல முண் டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்கள் மிக மோசமான அளவில் உருக்குலைந்த நிலை யில், இந்த நிலச்சரிவில் சிக்கி உயி ரிழந்தோர் எண்ணிக்கை 430ஐ தாண்டியுள்ளது. காணாமல் போன 100க்கும் மேற்பட்டோர்களை மீட்கும் பணி 15ஆவது நாளாக தொ டர்ந்து நடைபெற்று வருகிறது.
அடித்துச் செல்லப்பட்டது
நிலச்சரிவு மீட்புப் பணிக்காக கடும் சிரமத்துக்கு இடையே சாலி யாற்றின் குறுக்கே ராணுவம் கட்டிய “பெய்லி” என அழைக்கப் படும் எஃகு பாலம் கனமழை வெள் ளத்தால் அடித்துச் செல்லப்பட் டுள்ளது. சூரல்மலை, முண் டக்கை இடையே இருவழிஞ்சிப் புழா பகுதியில் அமைக்கப்பட்ட இந்த பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் மீட்புப்பணியில் தொய்வு ஏற் பட்டுள்ளது. இடைவிடா கனமழை யால் சூரல்மலை கிராமம் மீண்டும் வெள்ளத்தில் மிதந்து வரும் நிலை யில், அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
நிலச்சரிவு அபாயத்தில் செம்பராமலை கிராமம்
சூரல்மலையில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், மீட்புப் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. குறிப்பாக முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக சூரல்மலைக்கு அருகே செம்பரா மலை அடிவாரத்தில் வசித்து வந்த சுமார் 250 குடும்பங்களை பேரிடர் குழுவினர் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர். செம்பராமலைகிராமங்களில் நிலச் சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால் மறு உத்தரவு வரும் வரை மக்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டாம் என கேரள அரசு அதி காரிகள் எச்சரிக்கை விடுத்துள் ளனர்.
சூரல்மலையில் 30 மீட்டர் உயரத்திற்கு வெள்ளப் பெருக்கு
சூரல்மலை நிலச்சரிவில் குறைந்தது 30 மீட்டர் உயரத்திற்கு வெள்ளநீருடன் பொதுமக்கள், வீடு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன என கேரள அரசால் நிய மிக்கப்பட்ட ஜான் மத்தாய் தலைமையிலான நிபுணர் குழுவின் முதற்கட்ட அறிக்கை யில் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அறிக்கையில் மேலும் கூறப்படு வதாவது,”புஞ்சரி மட்டத்தில் மண்ணில் சரளைக்கற்கள் மட்டுமே உள்ளன. மற்ற எதுவும் அங்கு மிஞ்சவில்லை. கனமழையால் ஏற்பட்ட இயற்கைச் செயல்பாடுகளே நிலச்சரிவின் தாக்கம் அதிகரிக்கக் காரணம். அதனால் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு மண்ணும், கற்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஆறு பலவாறாக விரிவடைந்து சென்றுள்ளது. மூன்று முறை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வழியில் இரண்டு மூன்று இடங்களில் தடைகள் இருந்தன. அவற்றை உடைத்துக்கொண்டு நீர் வெளியேறிய தால் மோசமான அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தடைகள் உறுதியாக இருந்து இருந்தால் பாதிப்பின் வீரியம் குறைந்து இருக்கும்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.