states

img

பெண்கள் ஆடை குறித்து கோழிக்கோடு நீதிமன்றம் சர்ச்சை கருத்து

பெண்கள் ஆபாசமாக ஆடை அணிந்திருந்தால் பாலியல் குற்றங்கள் நடைபெறும் என்று கோழிக்கோடு செஷன்ஸ் நீதிமன்றம் சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த எழுத்தாளரும், மாற்றுத் திறனாளியுமான சிவிக் சந்திரன், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தலித் பெண் எழுத்தாளர் ஒருவர் புகார் அளித்த நிலையில், போலீசார் சிவிக் சந்திரன் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜாமின் கோரி சிவிக் சந்திரன் கோழிக்கோடு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிமன்றம், பாலியல் அத்துமீறல் நடந்ததாக கூறப்படும் நாளில், புகார் அளித்த பெண் ஆபாசமாக உடை அணிந்திருந்ததை சுட்டிக்காட்டியது. சிவிக் சந்திரனுக்கு ஜாமீன் வழங்கியது. மேலும், பெண்கள் ஆபாசமாக ஆடை அணிந்திருந்தால் பாலியல் குற்றங்கள் நடைபெறும் என்று கோழிக்கோடு செஷன்ஸ் நீதிமன்றம் சர்ச்சை கருத்து ஒன்றையும் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த சர்ச்சை கருத்துக்கு பல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

;