திருவனந்தபுரம், ஜன.16- திறமைகளை வளர்ப்பதில் ஆசியாவில் முதலிடத்திலும், உலகளவில் நான்காவது இடத்திலும் கேரள ஸ்டார்ட் அப் மிஷன் உள்ளது. குளோபல் ஸ்டார்ட்அப் எக்கோ சிஸ்டம் (Global Startup Ecosystem Report 2022) வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தக வல் வெளியாகி உள்ளது. கேரளா ஸ்டார்ட் அப் மிஷன் (கேஎஸ்யு எம்) தலைமையில், 2022இல் இருநூறுக்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. ஒன்பதாயிரத் திற்கும் மேற்பட்டோருக்கு புதுமையான யோசனைகளுடன் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியான தலை யீடுகள் மூலம், மாநிலத்தின் ஸ்டார்ட்அப் முயற்சிகளுக்கு உதவும் சூழல் அமைந்து, பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. மாநிலத்தில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் அடைகாக்கும் (இன்கு பேட்டர்) நடவடிக்கைகளுக்காக 22 பூட்கேம் ப்கள், எட்டு ஹேக்கத்தான்கள் மற்றும் 10 உச்சி மாநாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஏழு ஆராய்ச்சி விளக்க கூட்டங்கள், மூன்று வணிக விளக்க நாட்கள் மற்றும் சுமார் ஐம்பது வெபினார்களை நடத்தியது. கடந்த ஆண்டு, கேஎஸ்யுஎம் 80 ஸ்டார்ட் அப்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு சர்வதேச வணிக பிரதிநிதிகளை வெளி நாட்டு உச்சிமாநாடுகள் மற்றும் வர்த்தக கண்காட்சிகளுக்கு அனுப்பியது.