திருவனந்தபுரம், செப். 2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளராக எம்.வி. கோவிந்தன் தேர்வு செய்யப்பட்டதை யடுத்து தனது உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதன்மூலம் காலியான இடத்தை சபா நாயகர் எம்.பி.ராஜேஷ் நிரப்புகிறார். சபா நாயகராக ஏ.என்.ஷம்சீரை தேர்வு செய்ய வும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயற்குழு முடிவு செய்துள்ளது. திரித்தாலா சட்டப்பேரவை தொகுதி யில் இருந்து மகத்தான வெற்றி பெற்று சட்ட சபைக்கு வந்து சபாநாயகரானார் எம்.பி.ராஜேஷ். இந்திய மாணவர் சங்க மாநில செயலாளராகவும், வாலிபர் சங்க மாநில தலைவராகவும், அகில இந்திய தலைவ ராகவும் பணியாற்றினார். தற்போது சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினராக உள்ளார். 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் நாடாளு மன்ற உறுப்பினரான ராஜேஷ், திருவனந்த புரம் சட்ட அகாடமியில் பொருளாதா ரத்தில் எம்.ஏ மற்றும் சட்டப் பட்டம் பெற்றுள் ளார். இங்கிலாந்து வெளியுறவு அலுவலகத் தால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஏழு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர் ‘தி வீக்’ பத்திரிகையின் சிறந்த இளம் நாடாளுமன்றவாதி விருதையும், மனோரமா நியூஸின் சிறந்த நாடாளுமன்ற வாதி விருதையும் பெற்றவர். எட்டு நூல்கள் வெளியிட்டுள்ளார்.
ஏ.என்.ஷம்சீர்
2011 ஆம் ஆண்டு தலச்சேரி தொகுதி யில் அதுவரை இல்லாத பெரும்பான்மை யுடன் வெற்றிபெற்றும், இரண்டாவது முறையாக 36,801 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றும் சட்டமன்றத்திற்கு வந்தார் ஏ.என் ஷம்சீர். தலச்சேரியின் வளர்ச்சியில் பல முக்கியத் திட்டங்கள் இவரது காலத்தில் தொடங்கி முடிக்கப் பட்டன.