திருவனந்தபுரம், நவ.23 - கேரளாவுக்கு மீண்டும் தேசிய அங்கீகாரம்.இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, நாட்டிலேயே தொழிலாளர்களுக்கு அதிக தினசரி ஊதியம் வழங்கும் மாநிலமாக கேரளா உள்ளது. இந்த சாதனை ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட ஆண்டு கையேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் கேரளா தினசரி ஊதியத்தில் முன்னணியில் இருந்தது.நாட்டின் சிறந்த பொதுக் கல்வித் துறைக்கான ஒன்றிய அரசின் அங்கீகாரம் அண்மையில் கிடைத்துள்ள நிலையில், இந்தப் பாராட்டு முக்கியத்துவம் பெறுகிறது. ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரமும் கேரளாவின் தொழிலாளர்களை தக்கவைத்துக் கொண்டதற்கு சான்றாகும்.
இந்திய மாநிலங்களின் சமீபத்திய புள்ளிவிவரங் களின்படி, 2022 நிதியாண்டில் கேரளாவில் கட்டுமானத் தொழிலாளர்களின் சராசரி தினசரி ஊதியம் ரூ.837.30 ஆகும்.கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த கேரளா வின் சராசரி தினசரி ஊதியம் ரூ.677.60.மாநிலத்தில் ஒரு வருடத்தில் தினக்கூலி ரூ.159.70 அதிகரித்துள்ளது. இது ஒரு நீண்டகால சாதனை. மிகக் குறைந்த ஊதியம் பெறும் மாநிலங்களான திரிபுரா மற்றும் மத்தியப் பிரதேசத்தை விட கேரளாவில் மூன்று மடங்கு அதிகமாக ஊதியம் உள்ளது. கேரளாவில் பணிபுரியும் ஒரு கட்டுமானத் தொழிலாளி ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.837.30 சம்பாதிக்கிறார், திரிபுராவில் ரூ.250, மத்தியப் பிரதேசத்தில் ரூ.267, குஜராத்தில் ரூ.296, மகாராஷ்டிராவில் ரூ.362. ஜம்மு-காஷ்மீரில் ரூ.519.தமிழ்நாடு ரூ.478, இமாச்சலப் பிர தேசத்தில் ரூ.462, அரியானாவில்- ரூ.420, ஆந்திரப் பிரதேசம் ரூ.409.விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத துறைகளில் கேரளாவில் அதிக ஊதியம் உள்ளது. அடுத்த இடத்தில் இமாச்சலப் பிரதேசம் உள்ளது.