states

img

கேரளாவில் மருத்துவர்களை பாதுகாக்க அவசர சட்டம் நிறைவேற்றம்!

மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 75 லட்சம் வரை அபராதமும் வித்திக்கும் வகையிலான அவசரச் சட்டத்தை கேரள அரசு நிறைவேற்றியது.
கேரள மாநிலத்தில், கொட்டாடக்காராவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நேயாளி, பெண் மருத்துவரை கத்திரிக்கோளால் தாக்கி கொலை செய்தார். இதை அடுத்து மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்ய கோரி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டு, அவசர சட்டமாக நிறைவேற்றப்பட்டது. அதன்படி, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 75 லட்சம் வரை அபராதமும் விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.