திருவனந்தபுரம், அக். 5- கேரள முதல்வர் பினராயி விஜயன் புதனன்று (அக்.5) ஐரோப்பா புறப்பட்டார். அதிகாலை 3.45 மணிக்கு நெடும்பாசேரி (கொச்சி) விமான நிலையத்தில் இருந்து நார்வே தலைநகர் ஆஸ்லோவுக்கு புறப்பட்டார். முதல்வரின் ஐரோப்பா பய ணம் மாநிலத்தின் கல்வி மற் றும் தொழில் துறைகளை மேம்படுத்துவதை நோக்க மாகக் கொண்டுள்ளது. நார்வே தவிர, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடு களுக்கும் திட்டமிட்டபடி முதல்வர் செல்ல உள்ளார்.