states

img

களமச்சேரி குண்டுவெடிப்பு துரதிருஷ்டவசமானது: கேரள முதல்வர் பினராயி விஜயன்

களமச்சேரி குண்டுவெடிப்பு துரதிருஷ்டவசமானது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே களமசேரி பகுதியில் உள்ள கிறிஸ்தவ மத கூட்டரங்கில் இன்று காலை மத வழிபாடு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடிரென குண்டு வெடித்தது. இதில் பெண் ஒருவர் பலியானார். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர்.இந்த குண்டுவெடிப்பில் படுகாயமடைந்தவர்களில் 7 பேர் கவலைகிடமாக உள்ளனர்.

மத வழிபாட்டு அரங்கில் குண்டு வெடிப்பு நடந்தது எப்படி என கேரள காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், குண்டு வெடிப்பு நடந்த பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.குண்டுவெடிப்பில் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், விடுமுறையில் உள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்புமாறும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. சம்பவம் தொடர்பான விவரங்களை சேகரித்து வருகிறோம். அனைத்து உயர் அதிகாரிகளும் எர்ணாகுளத்தில் உள்ளனர்.டிஜிபி சம்பவ இடத்துக்கு விரைந்தார். விசாரணைக்கு பிறகே கூடுதல் விவரங்கள் தெரிய வரும் என கேரள முதல்வர் பினராயி தெரிவித்தார்.