திருச்சூர், பிப். 18 - கேரள மூன்றாம் பாலினத் தினர் கலை விழா கலாச்சார நகரமான திருச்சூரை வண்ணமயமாக ஒளிரச் செய்தது. அடுத்த இரண்டு நாட்கள் திருச்சூரின் கலை யரங்கை மூன்றாம் பாலினத் தோர் நிரப்ப உள்ளனர். உயர் கல்வித்துறை அமைச்சர் டாக்டர் ஆர். பிந்து, கலை விழாவை துவக்கி வைக்க, மூன்று நாள் திருவிழா வண்ண மயமான ஊர்வலத்துடன் தொடங்கியது.
பல்வேறு கலை வடிவங்கள் மற்றும் இசைக் குழுக்கள் அடங்கிய ஊர்வலம் ஸ்வராஜ் சதுக்க த்தை சுற்றி வந்து டவுன் ஹாலில் நிறைவடைந்தது. விழாவுக்கு பாலச்சந்தி ரன் எம்எல்ஏ தலைமை வகித் தார். கே.கே. ராமச்சந்திரன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ். பிரின்ஸ், துணைத் தலைவர் லதா சந்திரன், மாநகராட்சி நிலைக் குழுத் தலைவர் பி.கே. ஷாஜன், சமூக நீதித் துறை இயக்குநர் எச். தினேசன், மாவட்ட ஆட்சியர் கார்த்திக் பாணிகிரஹி, மாநில திரு நங்கையர் நீதிக்குழு உறுப்பினர்கள் ஷியாம எஸ். பிரபா, அர்ஜூன் கீதா, மாவட்ட திருநங்கையர் நீதிக்குழு உறுப்பினர் விஜய ராகவ மல்லிகா ஆகியோர் பேசினர்.
இவ்விழாவின் ஒருபகுதி யாக, நகர மண்டபம் மற்றும் எழுத்தச்சன் சமாஜம் மண்ட பத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப் பட உள்ளன. ஞாயிறன்று காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திங்களன்றும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் கலை விழா நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு நிறைவு கூட்டத்தை அமைச் சர் கே.ராஜன் தொடங்கி வைக்கிறார்.