திருச்சூர், பிப்.11- மலையாள நாடகத்தின் அனைத்து வகைகளையும் ஒன்றிணைத்து திருச்சூரை நாடகக் கடலாக மாற்றும் கேரளத்தின் 14-ஆவது சர்வதேச நாடக விழா (ItFolk) திருச்சூரில் பிப்ரவரி 9 வெள்ளியன்று துவங்கியது.
‘ஒற்றுமை-அமைதி-நம்பிக்கை’ என்பதே இந்தாண்டு நாடக விழாவின் கருப்பொரு ளாகும். அரண்மனை மைதானத்தில் நடந்த நாடக விழாவை அமைச்சர் சஜி செரியன் துவக்கி வைத்தார். திரைக்கலைஞர் ரோகிணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சங்கீத நாடக அகாடமி தலைவர் மட்ட னூர் சங்கரன்குட்டி தலைமை வகித்தார்.
அமைச்சர் ஆர். பிந்து சிறப்புரையாற்றினார். கலாச்சாரத் துறை நடத்தும் நாடக விழா மூலம், கலாச்சார நகரமான திருச்சூ ருக்கு உலகத்தரம் வாய்ந்த நாடகங்கள் வரவுள்ளதாக முன்னதாக நடந்த செய்தி யாளர் சந்திப்பில் அதிகாரிகள் தெரிவித்த னர். எட்டு நாட்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 23 நாடகங்கள் 47 காட்சிகளாக ஏழு இடங்களில் நாடகங்கள் நடைபெற உள்ளன.
தொடக்க நாளான வெள்ளியன்று நடிகர் முரளி திரையரங்கில், “அபத்ரிதாஸ்’’ நாடகம் நிகழ்த்தப்பட்டது. பிப்ரவரி 16 ஆம் தேதி இவ்விழா நிறைவடைகிறது.