முதியோர் நலன் மற்றும் பிரச்ச னைகளைத் தீர்ப்பதற்காக முதியோர் ஆணையத்தை உரு வாக்க கேரள அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் ஆர்.பிந்து செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.
எர்ணாகுளம் மாவட்ட பஞ்சாயத்து நைபுண்யா நகரம் திட்ட மாணவர்கள் கூட்டம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழாவை அமைச்சர் தொடங்கி வைத் த்தார். அப்போது அவர் மேலும் பேசுகை யில், “முதியோர் ஆணையத்தில் தலை வர் உட்பட 4 பேர் உறுப்பினர்களாக இருப் பர். அதில் ஒரு பெண் உறுப்பினர் கட்டா யம். முதியோர் ஆணைக்குழுவின் பதவிக்காலம் 3 வருடங்களாக இருக்கும். முதியவர்கள் முக்கிய நீரோட்டத்திலி ருந்து வெளியேற வேண்டியவர்கள் அல்ல. அவர்களை அரவணைத்துக் கொள்ளும் கொள்கையை அரசு கொண்டுள்ளது.
நினைவாற்றல் கிளினிக்குகள்
பரந்த அனுபவம் மற்றும் நடைமுறை அறிவுடன், அவர்களின் மதிப்புமிக்க பங்களிப்புகள் சமூக மறுசீரமைப்புக்கு உதவியாக இருக்கும். முதியோர் நலன் கருதி அரசு பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. வயதானவர்களுக்கு ஞாபக மறதி என்பது ஒரு பொதுவான நிலை. இதற்கு தீர்வாக, மாநிலம் முழுவதும் நினைவாற்றல் கிளினிக்குகள் அமைக்கப்படுகின்றன. வயோமித்திரம், வயோஜனா பூங்காக்கள் மற்றும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களின் தகவல்கள் சமூகநீதித் துறையின் சுனீதி போர்ட்டலில் கிடைக்கும்” என்று அமைச்சர் கூறினார்.