திருவனந்தபுரம் மலையாள திரைத்துறையில் பெண்கள் மீது நடக்கும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக நீதிபதி ஹேமா கமிட்டி சமர்ப்பித்த 24 பரிந்துரை களையும் அமல்படுத்தும் பணியை கேரள அரசு துவங்கியுள்ள நிலையில், நீதிபதி ஹேமா கமிட்டியிடம் சாட்சியம் அளித்தவர்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்க அரசின் தலையீடு செய்யும் எனவும் உயர்ந்த நிலையில் இருப்பவராக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
இதுகுறித்து செய்தியாளர்களி டம் அவர் மேலும் கூறுகையில், “அறிக்கை யை அரசு மூடிமறைக்கவில்லை. பல ரது தனியுரிமையை பாதிக்கும் வகையில் குறிப்புகள் இருப்பதால் அந்த அறிக்கையை வெளியிடக் கூடாது என்று நீதிபதி ஹேமா அவர்களே கடி தம் கொடுத்திருந்தார். தனிநபர்களின் தனியுரிமையை மீறும் தகவல்கள் இருப்பதால், அறிக்கையின் நகலுக் கான கோரிக்கைகளை தகவல் அறியும் உரிமை ஆணையம் நிராகரித்துள்ளது. தனியுரிமையை மீறும் பகுதியைத் தவிர்த்து, அறிக்கையை பகிரங்கப் படுத்த ஆணையம் பின்னர் உத்தர விட்டது.
இதற்கு தயாராகி வரும் நிலையில் மனுதாரர்கள் நீதிமன்றத் திற்கு வந்தனர். சட்ட தடை நீங்கி அறிக்கை வெளியானது. அறிக்கை வெளியிடுவதில் அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. பரிந்துரைகளை மிக முக்கியத்து வத்துடன் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதற்கட்டமாக, அவசரமாக பரிசீலித்து உடனடி தீர்வுகாண வேண்டிய பிரச்னை களுக்கு தீர்வு காணப்பட்டது. பின்னர் விரிவான பரிசோதனை மூலம் செயல்படுத்த வேண்டிய பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டது.
பொதுவான வழிகாட்டுதல்களை கொண்டு வர அர சுக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்ப தற்கும் அறிக்கை பரிந்துரைக்கிறது. இதில் சட்டம் ஒழுங்கு அமைப்புகள் திறம்பட தலையிட முடியும். இ-டாய்லெட்கள், உடை மாற்றும் அறைகள், பயணத்திற்கான பா துகாப்பு, படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் தங்கும் வசதி போன்ற வற்றை அரசால் மட்டும் முடிவு செய்ய முடியாது. இதுவும் சினிமா கான்க்ளேவில் விவாதிக்கப்படும்.
ஒட்டுமொத்த திரையுலகமும் தவறு செய்வதாக அரசு கருதவில்லை. ஆனால் விரும்பத்தகாத போக்குகளில் ஈடுபடாதீர்கள். நிறுவனங்கள் கேள்வி கேட்கவும், கண்ணியமான ஊதி யத்தை உறுதி செய்யவும் முன்முயற்சி எடுக்க வேண்டும். திரைப்படத்தில் பாலி யல், நிதி மற்றும் உளவியல் சுரண்டல் களை அனுபவிப்பவர்களுடன் அரசு நிற்கிறது. பாதிக்கப்பட்டவருடன் நிபந்தனையற்ற ஒற்றுமை மற்றும் வேட்டையாடுபவர்களுக்கு எதிராக இடைவிடாத போராட்டம் ஆகியவை அரசாங்கத்தின் தனிச்சிறப்பு. இது பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.