கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் சித்தூர் அருகே உள்ளது நல்லேபுள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் டிசம்பர் 20ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண் டாட்டம் நடைபெற்றது. இந்த கொண் டாட்டத்தின் பொழுது பள்ளிக்குள் அனு மதி இன்றி நுழைந்த ஆர்எஸ்எஸ் - பாஜக கட்டுப்பாட்டில் உள்ள விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பின் குண்டர்கள் 3 பேர் மாணவர்களுக்கு கிறிஸ்தவ முறைப்படி உடைகள் அணியக் கூடாது என்றும், ஆசிரியர்களை ஆபாச மாக திட்டியும், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் சித்தூர் போலீசாரி டம் புகார் அளித்தார். விஎச்பி மாவட்டச் செயலாளர் கே.அனில்குமார், மாவட்ட இணைச் செயலாளர் வி.சுசாசனன், பஞ்சாயத்து கமிட்டித் தலைவர் கே. வேலாயுதன் ஆகிய 3 பேரையும் சித்தூர் போலீசார் (5 பிரிவுகளின் கீழ்) கைது செய்து உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். தொடர்ந்து 3 பேரும் சிறை யில் அடைக்கப்பட்டனர்.
இன்று மோடியின் கிறிஸ்துமஸ் ஷூட்டிங்
ஆர்எஸ்எஸ் - பாஜக கட்டுப்பாட்டில் உள்ள விஎச்பி குண்டர்கள் பாலக்காடு பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடத்தக் கூடாது என மிரட்டல் விடுத்து கைது செய்யப்பட்டனர். ஆனால் பிரதமர் மோடியோ திங்கள்கிழமை தில்லியில் உள்ள சிபிசிஐ மையத்தில் இந்திய கத்தோ லிக்க ஆயர்கள் மாநாட்டில் நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பங்கேற்கிறார். நாட்டில் உள்ள கத்தோ லிக்க திருச்சபையின் தலைமையகத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்வது இதுவே முதல் முறை என்ற நிலையில், மணிப்பூர், சம்பல், ஆஜ்மீர் வன்முறை விவகாரத்தை மறைக்கவே மோடி இந்த கிறிஸ்துமஸ் ஷூட்டிங்கை நடத்த உள்ளார் என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மீம்ஸ் செய்து கிண்டலடித்து வருகின்றனர்.