கேரள மாநிலம் அம்பலப்புழாவில் இஸ்ரோ ஊழியர்கள் 5 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள அம்பலப்புழாவில், ஆந்திராவிலிருந்து வந்து கொண்டிருந்த லாரி, இஸ்ரோ உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பயணித்த கார் மீது மோதி விபத்துக்குள்ளது. இந்த விபத்தில் இஸ்ரோ ஊழியர்கள் பிரசாத், ஷிஜு, அமல், சச்சின் மற்றும் சுமோத் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.