states

img

சபரிமலையில் மூன்று வேளையும் அன்னமளிக்கும் தேவசம் போர்டு

சபரிமலை, நவ.28- மண்டல பூஜை - மகரவிளக்கு யாத்திரைக்கு வரும்  லட்சக்கணக்கானோருக்கு தேவசம் போர்டு சார்பில் இலவச உணவு விநியோகம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, ஒன்றரை லட்சம் பக்தர்கள், தேவசம்போர்டு அன்னதான மண்டபத்தில் இதுவரை சாப்பிட வந்துள்ளனர். மூன்று வேளையும் இலவச உணவு வழங்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 5000 பேர் சாப்பிடலாம். காலை 7 மணிக்கு  உணவு விநியோகம் தொடங்கும். இரவு 7 முதல் 11 மணி  வரை, உப்பு மா, கடலை மற்றும் சுக்கு காப்பியும் வழங்கப்படு கிறது. பகல் 12.30 மணி முதல் 3.30 மணி வரை, கூட்டாஞ்சோறு, சாலட், மற்றும் ஊறுகாய் அடங்கிய மதிய உணவு, இரவு 7 மணி முதல் கஞ்சி. இங்கு சிறப்பு அலுவலர் உள்பட 200 பேர் பணியில் உள்ளனர். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை டிராக்டரில் அத்தியா வசியப் பொருட்கள் கொண்டு வரப்படுகிறது. இ-டெண்டர் முறை மூலம் பொருட்கள் வாங்கப்படுகின்றன. பக்தர் களுக்கு இடையூறு இல்லாமல் உணவு வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று செயல் அலுவலர் எம்.ரவிக்குமார் தெரிவித்தார்.

சபரிமலை வருவாய்  ரூ.52 கோடியை கடந்தது

சபரிமலை வருவாய் ரூ.52 கோடியைக் கடந்தது. மண்டல பூஜை திருவிழா முடிந்து பத்து நாட்களில் சபரிமலையின் வருமானம் ரூ.52,85,56840. கடந்த ஆண்டு மொத்த வருமானம் ரூ.9,92,14963. அரவணா விற்றுமுதல் ரூ.23,57,74800 அப்பம் விற்பனை மூலம் ரூ.2,52,20640 கிடைத்துள்ளது. இத்தகவலை தேவசம் போர்டு தலைவர் கே. ஆனந்த கோபன் தெரிவித்துள்ளார்.