states

கடன் வரம்பு குறைப்பு கேரளாவுக்கு எதிரான பாஜகவின் போர் பிரகடனம்: ஏ.ஏ.ரஹீம்

திருவனந்தபுரம், மே 27- கேரளாவின் கடன் வரம்பை குறைக்கும் ஒன்றிய அரசின் முடிவு கேரளாவுக்கு எதிரான  போர் பிரகடனம் என்று ஏஏ ரஹீம் எம்பி கூறி னார். இது பாஜகவின் அரசியல் முடிவு. இது  கேரளா மற்றும் மலையாளிகள் மீதான புறக்கணிப்பின் தொடர்ச்சி. கேரளாவிற்கு எதிரான இந்த பாகுபாடு அரசியல் சாசனம் உத்தரவாதம் அளிக்கும் கூட்டாட்சி கொள்கைகளுக்கு எதிரானது என்று ரஹீம் பேஸ்புக் குறிப்பில் தெரிவித்துள்ளார். கேரளாவை எப்படியாவது திணற டிப்பதுதான் கடந்த சில காலமாக ஒன்றிய  அரசின் அணுகுமுறை. மாநிலத்திற்கான மானியங்கள், கடன்கள் மற்றும் வளர்ச்சி ஆகியவை தொடர்ந்து மறுக்கப்படுகின்றன. இந்த நிதியாண்டில் ரூ.32,442 கோடி கடன் பெற ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் தற்போது ரூ.15,390 கோடி மட் டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இது ரூ. 10,000 கோடி மானியம் குறைக்கப்பட்ட பின்  னர் என்பதையும் நினைவில் கொள்ள வேண் டும். அரசு உத்தரவாதம் மட்டும் அளித்த கிஃப்பி, ஓய்வூதிய நிதி போன்றவற்றின் மூலம் கடன் வாங்குவதைச் சுட்டிக் காட்டியே  ஒன்றிய அரசின் நடவடிக்கை என வெளிவரும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே முறை யை பின்பற்றிவரும் பாஜக ஆளும் மகா ராஷ்டிரா அரசுக்கு ஒன்றிய அரசிடம் இருந்து  ஒரு ரூபாயை கூட குறைக்கப்படவில்லை. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையின் பின்னணியில் பா.ஜ.க.வின் அரசியல் நோக்கம் உள்ளது என்பது இதிலிருந்தே தெரிகிறது. கேரளாவின் வளர்ச்சி, நலப்பணிகளை தடுக்கவே பொருளாதார முறையில் நெருக்க டியை உருவாக்கி வருகிறது. மக்கள் நலன்  மற்றும் வளர்ச்சி பணிகளை ஒரே நேரத்தில்  மேற்கொண்டு வரும் மாநில அரசுக்கு ஒன்றிய அரசின் இந்த அணுகுமுறை பெரும் நெருக்க டியை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய அரசின்  இந்த சவால்களை எல்லாம் கேரளா சமா ளிக்கும். அதற்கு திறனுள்ள ஒரு அரசு கேர ளாவை ஆளுகிறது. கேரளா வெள்ளம்  மற்றும் கோவிட் ஒருங்கே எதிர்கொண்ட மக்களுக்கு சொந்தமானது. பாஜகவின் இந்த கேடுகெட்ட அரசியல் நடவடிக்கை யை கேரளா ஒன்று சேர்ந்து எதிர்கொள்ளும்.  நாம் முன்னேறுவோம் என ரஹீம் குறிப் பிட்டுள்ளார்.