மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் திருவனந்தபுரத்தில் உள்ள இஎம்எஸ் அகாடமியில் ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. கூட்டத்திற்கு வருகை தந்த பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கேரள முதலமைச்சருமான பினராயி விஜயன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கேரள மாநில செயலாளருமான எம்.வி.கோவிந்தன் உள்ளிட்ட தலைவர்களை குழந்தைகள் ரோஜா மலர்கள் அளித்து வரவேற்றனர். மூன்று நாட்கள் நடைபெறும் இக்கூட்டம் குறித்து பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறுகையில், தற்போதைய அரசியல் நிலவரம், மக்களவைத் தேர்தல் மற்றும் இந்தியா அணி குறித்து விவாதிக்கப்படும். இந்தியா அணி பற்றி முன்பும் விவாதிக்கப்பட்டது. புதிய சூழ்நிலை குறித்து மீண்டும் விவாதிக்கப்படும் என்றார்.