மாநிலங்களில் உள்ள ஆரம்ப சுகா தார நிலையங்கள் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களின் பெயரை ‘ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்’ என மாற்ற ஒன்றிய அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளத்தின் சாதனைகளை ஒன்றிய பாஜக அரசு தனது என முத்திரை குத்தி திருட முயற்சிக்கிறது என்று முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டினார்.
டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் பெயர் மாற்றம் செய்து முடிக்கப்படும் என்று ஒன்றிய அரசு கூறுகிறது. இது ஆரோக்கியமான பரிந்துரை அல்ல என்றும் சுட்டிக்காட்டினார்.
புதிய கேரள அரங்கில் வியாழனன்று (நவ.30) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் பினராயி விஜயன் மேலும் கூறிய தாவது: கேரளத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் நாட்டிற்கு முன்மாதிரியாக உள்ளன. மற்ற மாநிலங்கள் துணை மையங்கள் மூலம் சிறிய சேவைகளை மட்டுமே வழங்குகின்றன, நாங்கள் அதிக சேவைகளை வழங்கியுள்ளோம். சமீபத்தில் இந்த துணை மையங்களை பொது சுகாதார மையங்களாக மேம்படுத்தியுள்ளோம்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் குடும்ப சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டு மாலை வரை செயல்படுகின்றன. படிப்படியாக, அரசாங்கமும் உள்ளாட்சி அமைப்புகளும் நிலம், கட்டிடம் மற்றும் வளர்ச்சியை சாத்திய மாக்கியுள்ளன. துணை மையங்களுக்கு வெறும் ரூ.4 லட்சம் மட்டுமே ஒன்றிய அரசு வழங்குகிறது. சுகாதாரத்துறை முழுமையாக மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பெயரை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏன் என்று இன்னும் புரியவில்லை.
மாநிலங்களுக்கான நிதியை நிறுத்திய ஒன்றிய அரசு
இப்போது இணை முத்திரை (கோ பிராண்டிங்) செய்யப்படவில்லை என்று சாக்குப்போக்கு கூறி மாநிலத்திற்கு வர வேண்டிய ஒன்றிய அரசின் பங்கை நிறுத்தி வைத்துள்ளனர். 2023-24 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதியுதவி திட்டங்களில் குறிப்பிட்டுள்ள நிதியைக் கூட ஒன்றிய அரசு வழங்கவில்லை. ஆர்ஓபி ரூ. 2521.99 கோடி மானியமாக அனுமதிக்கப்பட்டா லும், அதில் இந்த ஆண்டு ரூ.1376.70 கோடி மட்டுமே செலவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. என்.எச்.எம். வளங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் உள்வகை மானியங்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் நிதிகள் அனுமதிக் கப்படுகின்றன.
60:40 என்கிற விகிதத்தில் ரூ.826.02 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும். மாநில பங்கு ரூ.550.68 கோடி. இந்த நிதி ஒதுக்கீடுக்கு ஒரு தடையாக இணை முத்திரை செய்யப்படவில்லை என கூறுவது உண்மை க்குப் புறம்பானது. ஒன்றிய அரசின் உத்தரவின் படி, 6,825 நிறுவனங்களில் 99 சதவிகித நிறுவனங்கள் இணை முத்திரை முடித்துவிட்ட தாக, கடந்த அக்டோபரில் ஒன்றிய சுகாதார அமைச்சகத்துக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பிய தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சுகாதார இயக்கம் (என்எச்எம்) நட வடிக்கை களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.409.05 கோடியில் ரூ.371.20 கோடி ரொக்க மானியமாக நிதி அமைச்ச கம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தொகை 4 தவ ணைகளில் (தலா 25 சதவிகிதம் வீதம்) வழங்கப்படுகிறது. ரூ.92.80 கோடியை 3 தவணைகள் ஒதுக்கீடு செய்வ தற்கான காலம் முடிந்துவிட்டது. ஒரு தவணைக் கான தொகைக்கூட அனுமதிக்கவில்லை. அதாவது ரூ.278.4 கோடியை ஒன்றிய அரசு நிலுவைத் தொகையாக செலுத்த வேண்டும். ஒன்றிய ஒதுக்கீடு கிடைக்காததால் கேரள அரசின் ஒதுக்கீட்டை என்எச்எம் இப்போது பயன்படுத்துகிறது. அதன்படி திட்டங்கள் முன்னோக்கி நகர்கின்றன.
ஒன்றிய அரசால் ஊழியர்கள் பாதிப்பு
ஒன்றிய நிதி கிடைக்காததால், ஆஷா பணியாளர் களுக்கு ஊக்கத்தொகை, இலவச பரிசோதனை, இலவச சிகிச்சை, என்.எச்.எம்., பயோமெடிக்கல் நிர்வாகம்,கனிவ் 108 ஆம்புலன்ஸ் மூலம் நியமிக்கப்படும் டாக்டர்களின் சம்பளம் என அனைத்தும் நெருக்கடியில் உள்ளன. இதுதவிர, தீக்காயங் கள், திறன் மையம், அதிர்ச்சி சிகிச்சை, மனநலத் திட்டம், பல்துறை ஆராய்ச்சிப் பிரிவு, மருந்தக மேம்பாடு, மூன்றாம் நிலை புற்றுநோய் சிகிச்சை மையம், பாராமெடிக்கல் கல்வி ஆகிய பிரிவுகளில் ரூ.30 கோடி நிலுவை உள்ளது. எனவே, விரைவில் நிதி ஒதுக்க வேண்டும் என, அரசு தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. இத னால் தான், புதிய கேரள அரங்கம் போன்ற வெகுஜன விவாத நிகழ்ச்சிகள் அவசியமாகிறது.
நிமோனியா கண்காணிப்பு தீவிரம்
சுகாதாரத்துறை தொடர்பான இன்னொரு விஷயத்தையும் குறிப்பிடுகிறேன். சீனாவின் சில மாகாணங்களில் நிமோனியா பாதிப்பு அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சுகாதாரத்துறை மாநில அளவில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. மாநில மருத்துவக் குழு, பொது சுகாதாரத் துறை மற்றும் சிறப்பு மருத்துவர்கள் தற்போதைய நிலைமையை மதிப்பீடு செய்து வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களில், மாநிலத்தில் சுவாச நோய் அறிகுறிகள் அதிகரிக்கவில்லை. மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு மருத்துவமனைகளில் சுவாச நோய்கள் தொடர்பான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மலப்புரம் மாவட்டத்தில் புதிய கேரளம் அரங்கு மூன்று நாட்களில் முடிவடைந்தபோது மொத்தம் 53,546 மனுக்கள் பெறப்பட்டன. மஞ்சேரியில் 5683, கொண்டோட்டியில் 7259, மங்கடத்தில் 4122, மலப்புரத்தில் 4781 மனுக்கள் பெறப்பட்டன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.