தொடுபுழா, பிபி.5- ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகள் மற்றும் கேரளத்தை புறக்கணிப்பதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் தலைமையில் மாநிலம் முழுவதும் பிரச்சார அணிவகுப்பு நடைபெற உள்ளது. வரும் மார்ச் 9ஆம் தேதி இடுக்கி மாவட்டத்திற்கு வரும் அணிவகுப்பை வரவேற்க தொடுபுழா, தேவிகுளம், உடும்பன்சோலையில் குழுக்கள் அமைப்பு கூட்டங்கள் நடைபெற்றன. இவற்றில் அரங்கம் நிறைந்து மக்கள் கூட்டம் அலைமோதியது. தொடுபுழாவில் நடக்கவுள்ள அணிவகுப்புக்கான வரவேற்புக் குழு கூட்டத்தை மாநிலக்குழு உறுப்பினர் கே.பி.மேரி துவக்கி வைத்தார். தொடுபுழா மேற்கு பகுதி செயலாளர் டி.ஆர்.சோமன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி.வி.வர்கீஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.வி.மத்தாய், தொடுபுழா கிழக்கு பகுதி செயலாளர் முஹம்மது பைசல், மூலமட்டம் பகுதி செயலாளர் டி.கே.சிவன் நாயர், கரிமண்ணூர் பகுதி செயலாளர் பி.பி.சுமேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் கே.எல்.ஜோசப், நகராட்சி தலைவர் சனிஷ் ஜார்ஜ் ஆகியோர் பேசினர். வரவேற்புக் குழு பொறுப்பாளர்கள்: வி.வி.மத்தாய் (தலைவர்), முஹம்மது பைசல் (கன்வீனர்), டி.ஆர்.சோமன் (பொருளாளர்), பி.பி.சுமேஷ், சனிஷ் ஜார்ஜ் (துணைத் தலைவர்கள்), கே.எல்.ஜோசப், டி.கே.சிவன் நாயர் (இணை கன்வீனர்கள்). அடிமாலி தேவிகுளம் வட்டாரக் குழு சார்பில் அடிமாலியில் நடந்த வரவேற்புக் குழு அமைப்பு கூட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சி.வி.வர்கீஸ் துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷைலஜா சுரேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வி.சசி நிகழ்ச்சி நிரலை முன்மொழிந்தார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி.கே.ஷாஜி, எம்.லட்சுமணன், மறையூர் பகுதிச் செயலர் வி.சிகிமோன், அடிமாலி பகுதிச் செயலர் சாண்டி பி.அலெக்சாண்டர் ஆகியோர் பேசினர். பொறுப்பாளர்கள்: வழக்கறிஞர் ஏ.ராஜா எம்.எல்.ஏ (புரவலர்), கே.வி.சசி (தலைவர்), சாண்டி பி.அலெக்சாண்டர் (கன்வீனர்), டி.கே.ஷாஜி (பொருளாளர்). நெடுங்கண்டம் உடும்பஞ்சோலை வட்டாரக் குழு சார்பில், நெடுங்கண்டத்தில் வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சி.வி.வர்கீஸ் வரவேற்புக்குழு அமைப்பு கூட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்டக் குழு உறுப்பினர் பி.என்.விஜயன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.மோகனன் நிகழ்ச்சி நிரலை சமர்ப்பித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.கே.கோபிநாதன், ரமேஷ் கிருஷ்ணன், எம்.என்.ஹரிக்குட்டன், டி.எம்.ஜான், சாந்தன்பாறை பகுதி செயலாளர் சுனில்குமார், வண்டன்மேடு பகுதி செயலாளர் டி.எஸ்.பிசி. நெடுங்கண்டம் பகுதி செயலாளர் வி.சி.அனில் ஆகியோர் பேசினார். மார்ச் 9ஆம் தேதி நெடுங்கண்டத்தில் அணிவகுப்புக்கு வரவேற்பு அளிக்கப்படும். பொறுப்பாளர்கள்: எம்.எம்.மணி எம்.எல்.ஏ (புரவலர்), கே.எஸ்.மோகனன் (தலைவர்), வி.சி.அனில் (பொது கன்வீனர்), பி.என்.விஜயன் (பொருளாளர்).