திருவனந்தபுரம் மலையாள திரையிலகின் முன் னணி நடிகரான சுரேஷ் கோபி 18 ஆவது மக்களவை தேர்தலில் திருச்சூர் (கேரளா) தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி., ஆனார். கேரள மாநிலத்திற்கு அங்கீகாரம் அளிக்கிறோம் என்ற பெயரில் அரசியல் ஆதாயத்துடன் சுரேஷ் கோபிக்கு ஒன்றிய இணை அமைச்சர் பதவி வழங்க பாஜக எம்.பி., க்களின் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.
தொடக்கத்தில் சுரேஷ் கோபி தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என மறுத்த நிலையில், பிரதமர் மோடி பேசி அவரை ஒன்றிய அமைச்சர் பதவியில் அமர வைத்தார். தற்போது ஒன்றிய அரசில் பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சராக சுரேஷ் கோபி உள்ள நிலையில், “அமித் ஷா சொல் வதை கேட்க முடியாது” என்ற தொனி யில் ஒன்றிய அமைச்சர் பதவியில் இரு ந்து விலகுவது போன்று பேசியுள்ளார்.
இதுகுறித்து சுரேஷ் கோபி கூறுகை யில், “திரைப்படங்களில் நடிக்காவிட் டால் நான் இறந்தே போவேன். திரைப் படத்தில் நடிப்பதற்காக அனுமதி கோரி னேன், ஆனால் அமித் ஷா அனுமதி தரவில்லை. 22 படங்களில் நடிக்க உள்ளதாக கூறி அமித் ஷாவிடம் தந்த மனுவை, அவர் தூக்கி எறிந்துவிட்டார். அமித் ஷா அனு மதி தராவிட்டாலும் 22 படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன்; அனைத்து படங்களிலும் நடித்து முடிப்பேன். செப்டம்பர் 6 அன்று “ஒத்தக்கொம்பன்” படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளேன்.
படப்பிடிப்பு தளத்தில் அமைச்சர் வேலையைச் செய்ய, அமைச்சகத்தி லிருந்து மூன்று அல்லது நான்கு பேரை அழைத்துச் செல்வேன். நான் அவர் களுக்கு ஒரு கேரவனைக் கொடுப்பேன். இதையெல்லாம் நான் செய்ய விரும்பு கிறேன். ஒருவேளை என்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால், நான் காப்பாற்றப்பட்டதாகக் கருதுவேன். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்” என அவர் கூறியுள்ளார். அமித் ஷா உத்தரவை மீறி நடிப்பதில்உறுதியுடன் இருப்பதால் சுரேஷ் கோபி அமைச்சர் பதவியி லிருந்து விரைவில் விலகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.