states

img

கேரள தலைமைச் செயலகத்தில் தீ

திருவனந்தபுரம், மே 9- கேரள தலைமைச் செயலகத்தில் தீவிபத்து ஏற்பட்டது. அமைச்சர் பி.ராஜீவ் அலுவலகம் அடங்கிய மூன்றாவது மாடியில் உள்ள வடக்கு சாண்ட்விச் பிளாக்கில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் செவ்வாயன்று (மே 9) காலை 7.55 மணியளவில் நடந்துள்ளது. தீ விபத்து நடந்த சம்பவ இடத்துக்கு உடனடி யாக 2 தீயணைப்பு படையினர்  விரைந்தனர். காலை 8.10 மணியளவில்  தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அலுவலகத்தின் மேற்கூரை மற்றும் திரைச்சீலை கள் எரிந்ததாகவும், கோப்புகள் தீப்பிடிக்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். ஏசியில் ஏற்பட்ட கோளாறே தீ விபத்துக்கு காரணம் என முதற்கட்டமாக தெரிய வந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். தீ முழுவதுமாக அணைக்கப்பட்ட பின், ஊழியர்கள் உள்ளே அழைத்து செல்லப்பட்டனர்.