states

img

மார்க்சிஸ்ட் கட்சி ஊழியரை கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை  

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியரை கொலை செய்த வழக்கில்  ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி பகுதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் விஜயன்(38). இவருக்கும் இதே பகுதி ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஸீஜஸ்(32), ஹரீஷ்(31), மிதுன்(29), சுமேஷ்(27) ஆகிய 4 பேருக்கும் கடந்த 3 வருடங்களாக அரசியல் சம்பந்தமாக மோதல் இருந்து வந்துள்ளது. மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் விஜயனை இந்த 4 பேரும் திட்டமிட்டு கொலை செய்தனர்.  

இது தொடர்பான வழக்கு பாலக்காடு மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து நேற்று வெளியிட்ட தீர்ப்பில் விஜயனை அடித்து கொலை செய்த 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

;