states

img

மண்டல காலம் தொடங்கி 24 நாட்களில் சபரிமலையில் 125 கோடி வருவாய்

சபரிமலை, டிச.11- சபரிமலையில் இதுவரை ரூ.125 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தேவசம் போர்டு தலைவர் கே.ஆனந்தகோபன் தெரி வித்துள்ளார். இத்தொகை காணிக்கை மற்  றும் இதர வழிபாட்டு இனங்களில் கிடைத்த  வருவாயாகும். இந்த ஆண்டு மண்டல  காலம் தொடங்கி 24 நாட்கள் கடந்து  விட்டன. வரும் நாட்களில் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. சன்னிதானத்தில் உள்ள தேவசம் மாநாட்டு அரங்கில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது:  பதினைந்து நாட்களுக்கு அப்பம், அர வணை இருப்பு உள்ளது. தினமும் சராசரி யாக மூன்று லட்சம் அரவணைகள் விற்ப னையாகிறது. பக்தர்கள் தடையின்றி அப்  பம் மற்றும் அரவணை வாங்கலாம். கொள்  கலன்கள் தேவைக்கேற்ப உள்ளன. விடு முறை நாட்கள் என்பதால் அதிகளவில் மக்  கள் வந்து செல்வர்.

நெரிசலைக் கட்டுப்  படுத்தி, சுமூகமான தரிசனம் கிடைக்க ஏற்  பாடு செய்யப்பட்டுள்ளது. மரக்கூட்டத்தில் தொடங்கி படிப்படியாக சன்னிதானத்திற்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுகின்ற னர். நீண்ட வரிசையில் நிற்கும் பட்சத்தில்,  குழந்தைகள் சிரமமின்றி தரிசனம் செய்ய  வசதிகள் செய்து தருவது குறித்து பரிசீலிக் கப்படும். இது குறித்து முதல்வரின் கவனத்  திற்கு கொண்டு செல்லப்படும். அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. குறைபாடுகள் சுட்டிக்  காட்டப்பட்ட உடன் சரி செய்யப்படுகின்றன. திங்கள்கிழமை (டிச.12) முதல்வர் தலை மையில் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள் ளது. அடுத்த ஆண்டு முதல் அரவணை தேவசம்போர்டால் தயாரிக்கப்பட்ட கொள் கலன்களில் விநியோகிக்கப்படும். ஆலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. சுற் றுச்சூலுக்கு உகந்த கொள்கலன்கள் தயா ரிக்கப்படும் என்றும் தேவசம் தலைவர் தெரி வித்தார். செயல் அலுவலர் எச்.கிருஷ்ண குமார், நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ்.எஸ். ஜீவன், மின்வாரிய செயற்பொறியாளர் ராஜேஷ் மோகன் ஆகியோர் செய்தியா ளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.