states

img

தொண்டையில் பந்து சிக்கி 11 மாத குழந்தை பலி

திருச்சூர் அருகே தொண்டையில் பந்து சிக்கியதில் 11 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம், திருச்சூர் அருகே உள்ள இரிஞ்ஞாலகுடா பகுதியை சேர்ந்த நிதின் - தீபா தம்பதியினருக்கு  மீரவ் கிருஷ்ணன் என்ற 11 மாத ஆண் குழந்தை இருந்தது. நிதின் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் குழந்தை மீரவ் வீட்டில் இருந்த சிறிய அளவிலான ரப்பர் பந்தை எடுத்து விளையாடிக்கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பந்தை அந்த குழந்தை விழுங்கியதாக தெரிகிறது. இதில் பந்து குழந்தையின் தொண்டையில் சிக்கியதால், மூச்சுவிட முடியாமல் மயங்கியது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தாய் தீபா,  குழந்தையை  அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். உடனே மருத்துவர்கள் தொண்டையில் சிக்கிய பந்தை எடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் அந்த குழந்தை மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து இரிஞ்ஞாலகுடா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.