states

உள்ளாட்சி அமைப்புகளில் ‘மகிழ்ச்சி பூங்கா’

திருவனந்தபுரம், ஜுன் 29-  அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ‘மகிழ்ச்சி பூங்கா’ தொடங்கப்படும். 941 பஞ்சாயத்துகள், 87 நகராட்சி கள் மற்றும் ஆறு மாநகராட்சிகளில் இந்த பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. அமைச்சர் எம்.பி.ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற பரவலாக்கப்பட்ட திட்டமிடல் மாநில அளவிலான ஒருங்கி ணைப்புக் குழுவில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. ஓய்வாக அமரவும் விளையாடுவதற்கும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கான வசதிகள் இந்த பூங்காக்களில் வழங்கப்படும். இதற்கு குறைந்தபட்சம் 50 சென்ட் நிலத்தை உள்ளாட்சி அமைப்புகள் கண்டறிய வேண்டும். கழிவு மேலாண்மை மையம் மற்றும் சுடுகாடுகளுக்கு அருகில் உள்ள இடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படு கிறது. பூங்காவிற்கு நிலம் வாங்குவது உள்ளிட்ட தேவைக ளுக்கு வளர்ச்சி நிதியும் சொந்த நிதியும் மட்டுமல்லாது கழிவு மேலாண்மைக்கான ஒதுக்கீட்டின் ஒரு பகுதியை பயன் படுத்தலாம். நன்கொடை மற்றும் சிஎஸ்ஆர் மூலமாகவும் நிதி திரட்ட முடியும். இதற்கான மாதிரி திட்டம் தயாரிக்க வேண்டும். தற்போதுள்ள பூங்காக்களை அதிக வசதிகள் செய்து மகிழ்ச்சி பூங்காக்களாக மாற்றலாம். வரைவுத் திட்டம், தலைமை நகர அமைப்பாளரால் தயாரிக்கப்பட்டு, ஆண்டுத் திட்டத்தில் சேர்க்கப்படும். பூங்காவில் என்ன இருக்கும்? நிலையான இருக்கைகள், பொழுதுபோக்கு சாதனங் கள், செல்ஃபி கார்னர், சிற்றுண்டிச்சாலை, மொபைல் ரீசார்ஜிங், இணைய வசதி, குடிநீர், ஓய்வறை, உடை மாற்றும் வசதி, அழகான விளக்குகள், சிறியஅளவிலான சந்திப்பு நிகழ்வுகள், பாடல்-நடனம், பூங்காவில் இருந்து வேலை,  சமூக யோகா, 3 டி திரையரங்க அமைப்பு, வானொலி, சைக்கிள் பாதை, நீச்சல் குளம், திறந்த உடற்பயிற்சி கூடம், குழந்தைகள் நூலகம், கழிவு சேகரிப்பு அமைப்பு, மாதம் ஒருமுறை மகிழ்ச்சி தினம், உள்ளூர் கலைஞர்களின் நிகழ்வு கள், உணவு திருவிழா போன்றவை இருக்கும்.