states

img

49 இல் 22 கேபிள்கள் பழுது - எஸ்.ஐ.டி அறிக்கை

குஜராத்தின் சவுராஷ்டிரா பிராந்தியத்தில் மோர்பி நகர் அமைந்துள்ளது. 1889-ல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அங்குள்ள மச்சூ நதியின் குறுக்கே, பாலம் கட்டப்பட்டது இந்தப் பாலத்தை 15 ஆண்டுகளுக்குப் பராமரிக்கும் ஒப்பந்தத்தை மோர்பி மாநகராட்சி நிர்வாகம், ஒரிவா என்ற தனியார் நிறுவனத்துக்கு கடந்த மார்ச் மாதம் வழங்கியது. அந்த நிறுவனம் ரூ.2 கோடியில் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டது. கடந்த 2022 அக்டோபர் 26-ம் தேதி, குஜராத் புத்தாண்டு தினத்தில் தொங்கு பாலம் மீண்டும் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட சில தினங்களிலேயெ அங்கு விபத்து ஏற்பட்டு 141 பேர் உயிரிழந்தனர் பலர் காயமடைந்தனர்.
தற்போது சிறப்பு விசாரணைக்குழு நடத்திய விசாரணையின் அறிக்கையை வெளியிட்டுள்ளது.அதில், பாலத்தில் 49 கேபிள்களில் 22 கேபிள்கள் துருப்பிடித்து உடைந்து இருந்துள்ளன 7 மாதங்கள் பராமரிப்பு பணிகள் நடந்தும் எவ்வித உறுதித்தன்மை சோதனையும் நடத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளது
141 பேர் உயிரிழந்த குஜராத் மோர்பி பால விபத்தின் சிறப்பு விசாரணைக்குழு அறிக்கை தகவல்