பாஜக ஆளும் குஜராத் மாநிலத் தின் அகமதாபாத் நகருக்கு அருகே கட்லோடியா பகுதி யில் உள்ளது கலோரெக்ஸ் பியூச்சர் உயர்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் பன் முகத்தன்மை, கலாச்சார உணர்திறன் ஊக்குவிப்பு, வகுப்புவாத வன்முறை குறித்து ஆசிரியர் ஒருவரால் பாடம் கற் பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இஸ்லா மியச் சடங்கு, நமாஸ் குறித்து பாடம் நடத்துவதாக கூறி தீவிர இந்துத்துவா அமைப்புக்களான அகில பாரதிய வித் யார்த்தி பரிஷத் (ஏபிவிபி), பஜ்ரங் தள் உள்ளிட்ட அமைப்புகளின் குண்டர்கள் கலோரெக்ஸ் பியூச்சர் பள்ளியின் முன்பு போராட்டம் நடத்தினர். அத்துமீறி பள்ளிக் குள் புகுந்து பன்முகத்தன்மை தொடர் பாக பாடம் நடத்திய ஆசிரியர் மீது 8 பேர் கொண்ட இந்துத்துவா கும்பல் தாக்குதல் நடத்தியது.
விசாரணைக்கு உத்தரவிட்ட பாஜக அரசு
இந்துத்துவா குண்டர்கள் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக குஜராத் பாஜக அரசு எவ்வித நடவடிக்கை யும் எடுக்காமல், கலோரெக்ஸ் பியூச்சர் உயர்நிலைப்பள்ளி நிர்வாகத்திடம் நேரடி விசாரணை மேற்கொண்டது. பள்ளி முதல்வர் நிராலி டாக்லி,” மாணவர்களி டம் எவ்வித மதப் பழக்கவழக்கங்களைச் செய்யும்படி கட்டாயப்படுத்தவில்லை” என விளக்கம் அளித்துள்ளார். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத மாநில கல்வி அமைச்சர் பிரபுல் பன்ஷேரியா, “பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்ச்சி களை ஏற்பாடு செய்வதன் மூலம் மாநி லத்தின் அமைதியான சூழ்நிலையை சீர் குலைக்க சிலர் விரும்புவதாக தெரி கிறது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாண வர்களுக்கு தாங்கள் என்ன செய்கிறோம் என்பது கூட தெரியாமல் இருக்கலாம். இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது” என்று கூறி கலோரெக்ஸ் பியூச்சர் உயர் நிலைப்பள்ளி மீது விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
முதல்வரின் சொந்த தொகுதி
இச்சம்பவம் குஜராத் முதல்வராக உள்ள பூபேந்திர படேலின் சொந்த சட்ட மன்றத் தொகுதியான கட்லோடியாவில் நிகழ்ந்தது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக பூபேந்திர படேல் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.