states

img

வெள்ளக்காடாய் மாறிய குஜராத்

மோடி பிறந்தநாளுக்காக நீர் திறக்காமல் வைக்கப்பட்ட நர்மதா அணை கனமழையை தாக்குப்பிடிக்க முடியாமல் ஒரே நேரத்தில் திறக்கப்பட்ட மதகுகள் 

மோடியின் பிறந்தநாளுக்காக நர்மதா அணையில் தண்ணீர் திறக்காமல் வைக்கப்பட்ட நிலையில், தற்போது கனமழையால் ஒரே நேரத்தில் அணையிலிருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதால் குஜராத் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த  3 நாட்களாக தொடர்ந்து  கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிகப்பட்சமாக  கடந்த ஞாயிறன்று மாலை 6 மணி  முதல் அடுத்த 12 மணி நேரத்தில் 76 மிமீ மழை பதிவாகிய நிலையில்,  திங்களன்றும் மாநிலத்தின் பல்  வேறு பகுதிகளில் இயல்புக்கு  மாறாக கனமழை புரட்டியெடுத்தது. நர்மதா ஆற்றின் சர்தார் சரோ வர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி களிலும், கடனா அணைப் பகுதிகளி லும் பெய்த கனமழையால், நர்மதா  மற்றும் மகிசாகர் ஆகிய இரு ஆறு களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மத்தியப்பிரதேசத்தின் இந்திராசாகர் அணையிலிருந்து அதிகளவு உபரிநீர் வெளியேற்றப் படுவதால் நர்மதா ஆற்றில் வெள்  ளம் அபாயகட்டத்தை தாண்டி பாய்ந்து வருகிறது.  இதனால் நர்மதா, பரூச், வதோ தரா, தாஹோத் மற்றும் பஞ்ச மஹால், மஹிசாகர், சபர்கந்தா, ஆரவல்லி மற்றும் கெடா மாவட்  டங்கள் வெள்ளத்தில் மிதக்கி றது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்  பட்ட மாவட்டங்களில் இருந்து 9 ஆயிரத்து 613 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட் டுள்ளனர்.

மோடியால் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவு 

நர்மதா ஆற்றின் கரையோர மாவட்டங்கள் மிகமோசமான பாதிப்பை எதிர்கொண்டு வரும் நிலையில், நர்மதா ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள நீர் வெளியேறுவதற்கு காரணம் மழை  அல்ல, குஜராத் மாநில பாஜக அரசு தான் என குஜராத் மாநிலத்தின் காங்கிரஸ் ஆதரவு தலித் செயற்  பாட்டாளரும், வடகம் தொகுதி  எம்எல்ஏவிமான ஜிக்னேஷ் மேவானி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில்,”சவுராஷ்டிரா, வடக்கு குஜராத் மற்றும் கட்ச் ஆகிய பகுதி களைச் சேர்ந்த மக்கள் நர்மதா அணை நீர்த்தேக்கத்தில் இருந்து  தண்ணீர் திறக்க கடந்த ஒரு மாத மாக கோரிக்கை விடுத்து வந்தனர்.  அணையில் போதுமான அளவு  தண்ணீர் இருந்தும் குஜராத் பாஜக அரசு கோரிக்கையை கண்டு கொள்ளவில்லை. நர்மதா அணை  நீர்த்தேக்கம் செப்டம்பர் 17-க்கு முன்  னதாகவே முழுகொள்ளளவை எட் டும் நிலையில் இருந்தது. ஆனால் குஜராத் பாஜக அரசு தண்ணீர் திறக்காமல் இருந்த நிலையில், மோடியின் பிறந்தநாளான செப்.  17 அன்று திடீரென நர்மதா அணை  நீர்த்தேக்கத்தில் இருந்து குஜராத் அரசு தண்ணீர் திறந்தது. கனமழை யால் அணை நிரம்பிய நிலையில்  இருந்ததால் ஒரே நேரத்தில் அனைத்து  மதகுகளும் திறக்கப்பட்டன. இத னால் நர்மதா ஆற்றில் ஒரே நேரத்  தில் 18 லட்சம் கன அடி தண்ணீர்  பாய்ந்தது.

இதன் விளைவாக குஜ ராத்தின் பரூச், வதோதரா மற்றும்  நர்மதா மாவட்டங்கள் வெள்ளத் தில் மூழ்கியுள்ளன. வீடுகள் இடிந்த தால் ஆயிரக்கணக்கான மக்கள் ஆதரவற்றவர்களாக உள்ளனர். சிலர் வீடுகள் தண்ணீரில் மூழ்கி யதால் வீடுகளின் கூரையில் தஞ்சம்  அடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.  மத்தியப் பிரதேசத்தின் இந்திராசாகர் அணையில் இருந்து நர்மதாவில் 9.45 லட்சம் கனஅடி நீர் பாய்ந்து வருவதாலும், குஜ ராத்தில் தற்பொழுது கனமழை பெய்து வருவதாலும் நர்மதா நீர்தேக்கத்தின் நிலைமை மோச மாகியுள்ளது. ஏற்கனவே தீவிர கன மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், அணை யில் அதிக தண்ணீர் இருப்பதை  கணக்கில் கொண்டு சில நாட்க ளுக்கு முன்பே படிப்படியாக தண் ணீர் திறந்து விடப்பட்டிருக்கலாம். ஆனால் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக தண்ணீரை  திறக்காமல் தாமதப்படுத்தி பேரி டர் அளவுக்கு வெள்ளப்பெருக்கை பாஜக அரசு ஏற்படுத்தியுள்ளனர். இது இயற்கையான வெள்ளம்  அல்ல. மனிதனால் உருவாக்கப் பட்ட பேரழிவு. இது முற்றிலும் வெட்  கக்கேடான மற்றும் கேவலமான நிலை” என அவர் கூறியுள்ளார்.