அகமதாபாத், டிச. 10 - குஜராத்தில் காங்கிரசின் தலித் முகமாக அறி யப்படும் ஜிக்னேஷ் மேவானி, கடந்த 2017 தேர்தலில் வத்காம் தொகுதியில் காங்கிரஸ் ஆதரவு சுயேட்சை யாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்தமுறை நேரடி யாக காங்கிரஸ் வேட்பாளராகவே களமிறங்கிய அவர் 2-ஆவது முறையாக வெற்றிபெற்றுள்ளார். வத்காம் தொகுதியில் 90 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள், 44 ஆயிரம் தலித் வாக்காளர்கள் இருந்தும், கடுமையான போராட்டத்திற்கு இடையேதான் ஜிக்னேஷ் மேவானிக்கு இந்த வெற்றி சாத்தியமானது. இந்நிலையில், குஜராத் தேர்தல் முடிவுகள் குறித்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டிற்கு ஜிக்னேஷ் மேவானி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “நான் இன்னும் சிறந்த முறையில் பயன்படுத் தப்பட்டிருக்கலாம் என்று உறுதியாக கூறுகிறேன். நான் என் வேட்புமனுவை தாக்கல் செய்த பிறகு அல்ல,
ஆனால் அதற்கு முன்பே என்னைப் பயன் படுத்தி இருக்கலாம். மக்களின் மனத்தை புரிந்து கொள்ளக் கூடிய, நம்பகத்தன்மை கொண்ட- பாஜக வை கடுமையாக எதிர்க்கக் கூடிய மற்றும் குறிப்பி டத்தக்க ஆதரவாளர்களைக் கொண்ட- என்னைப் போன்ற ஒரு நபர் காங்கிரசில் இருந்தும், ஏன், என்னால், மாநிலம் முழுவதும் பொதுக் கூட்டங்களில் பேச முடியவில்லை? உண்மையில் என்னை வைத்து பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். கட்சியில் நிதிப் பற்றாக்குறை உள்ளது. இந்த விஷயத்தில் பாஜக-வுடன் வேறுபடுத்தி பார்க்க வேண்டும். அது ஒரு கட்சி அல்ல. ஒரு மாபெரும் கார்ப்பரேட் நிறுவனம். குஜராத் தேர்தல் முடிவு களில் இது ஒரு முக்கியமான காரணி. நாட்டில் எந்த அரசியல் கட்சியும் நம்ப முடியாத அளவுக்கு பாஜக விடம் பணம் இருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் ஆழமாக தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டும். நான் இந்தப் பதவிக்கு புதியவன். ஆனால் நாம் ஒன்றாக இணைந்து கட்சியை நடத்த வேண்டும். ஆற்றலுடனும் தொலைநோக்குடனும் புதிய உத்தி மற்றும் திட்டத்துடன் மக்களிடம் செல்ல வேண்டும். நாம் கிராமம், நகரம் என அனைத்து இடங்களுக்கும் செல்ல வேண்டும். வேறு வழியில்லை.” இவ்வாறு ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார்.