அகமதாபாத், நவ.21- சுயேட்சை வேட்பாளர்களாக களமிறங்கிய முன்னாள், இந்நாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 7 பேரை பாஜக தலைமை சஸ்பெண்ட் செய்துள்ளது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 1-ஆம் தேதியும், 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ஆம் தேதியுமாக இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடை பெற உள்ளது. இதில், முதற்கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக் கல் முடிந்து, பிரச்சாரம் தீவிரம டைந்துள்ளது. இந்நிலையில், பாஜக-வில் வாய்ப்பு கிடைக்காத மூத்த மற்றும் முன்னணி தலைவர்கள் பலர் சுயேட்சையாக களமிறங்கியிருப் பது, பாஜக தலைமைக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர், துணை முதல்வர், 5 அமைச்சர்கள், சபாநாய கர் உள்பட 42 எம்எல்ஏக்களுக்கு பாஜக இந்த முறை தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கவில்லை.
இந்நிலையில், இவர்களில் 7 பேர் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளனர். பாஜகவின் பழங்குடியினர் முகமாக இருக்கும் ஹர்ஷத் வாசவா நந்தோட் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட மனுத் தாக்கல் செய்துள்ளார். அரவிந்த் லதானி கேஷோட் தொகுதியில் சுயேட் சையாக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். சுரேந்திர நகர் மாவட்ட ஊராட்சி உறுப்பினரான சத்ரசிங் குஞ்சாரியா காங்கிரஸ் கட்சி சார்பில் தங்காத்ரா தொகுதி யில் போட்டியிட மனு தாக்கல் செய் துள்ளார். கேதன் பாய் படேல் என்ப வர் வல்சாத் மாவட்டத்தின் பார்தி தொகுதியில் சுயேட்சையாக போட் டியிட மனு தாக்கல் செய்துள்ளார். பாரத் சவ்தா ராஜ்கோட் மாவட்டத் தில் உள்ள ராஜ்கோட் கிராமப்புற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்துள் ளார். உதய் ஷா, கிர் சோம்நாத் மாவட்டத்தின் வேராவால் தொகுதி யில் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்திருக்கிறார். கரண் பரையா, அம்ரேலி மாவட் டத்தின் ராஜூலா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, ஹர்ஷத் வாசவா, அரவிந்த் லதானி, சத்ரசிங் குஞ்சாரியா, கேதன் பாய் படேல், பாரத் பாய் சாவ்தா, உதய் பாய் ஷா மற்றும் கரண் பாய் பரையா ஆகியோர் 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய் யப்பட்டுள்ளனர்.