states

குஜராத், தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம்

அகமதாபாத், நவ. 18 - குஜராத், தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாட்னா உயர்  நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் போராட்டமும் நடத்தியுள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் நிகில் எஸ். கரியல். இதே போல தெலுங்கானா மாநிலம் ஹைத ராபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக  இருந்தவர் அபிஷேக் ரெட்டி. இவர்கள் இருவரையும் பீகார் மாநி லம் பாட்னா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்து, உச்சநீதி மன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  குறிப்பாக, நீதிபதி நிகில் எஸ். கரியல் இடமாற்றத்திற்கு எதிராக, குஜராத் உயர் நீதிமன்ற வழக்கறி ஞர்கள் போராட்டத்திலும் ஈடு பட்டுள்ளனர். நேர்மையான நீதிபதி  தண்டிக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குஜராத் உயர் நீதிமன்ற வழக்கறி ஞர் சங்கத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டிய வழக்கறிஞர்கள், அதில் நீதிபதி நிகில் எஸ். கரியல் பணியிட மாற்றத்தைக் கண்டித்து நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்துள்ளனர்.  இதுதொடர்பாகக் பேட்டி அளித்துள்ள குஜராத் உயர் நீதி மன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரித்விராஜ் ஜடேஜா, “நீதிபதி இட மாற்றம் செய்ததற்கு கொலீஜியம் எந்த காரணத்தையும் சொல்ல வில்லை. நேர்மையாக இருந்தால்  தண்டனையா?” என்றுகேட்டுள்ளார்.

மேலும், “நேர்மையான, துணிச்ச லான நீதிபதி எந்த காரணமும் இல்லா மல் இடமாற்றம் செய்யப்பட்டுள் ளார். இது நீதித்துறை சுதந்திரத்தின் மீதான தாக்குதல். நீதித்துறை சுதந்திரம் கொலை செய்யப்பட்டுள்  ளது. இந்த முடிவு  எடுக்கப்படு வதற்கு முன்பு எங்கள் தலைமை  நீதிபதியிடம் கூட ஆலோசிக்க வில்லை. அவர் இந்த பிரச்சனை குறித்துப் பரிசீலிப்பதாக எங்க ளுக்கு உறுதியளித்துள்ளார். இந்த  விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் கொலீ ஜியத்திலும் முறையிட முடிவு செய்துள்ளோம்” என்று பிரித்விராஜ் ஜடேஜா குறிப்பிட்டுள்ளார்.  இதேபோல, நீதிபதி அபிஷேக் ரெட்டியை பாட்னா உயர் நீதிமன்றத் திற்கு மாற்றியதற்கு எதிராகத் தெலு ங்கானா உயர்நீதிமன்றத்திலும் போராட்டங்கள் நடைபெற்றன. எனினும், நீதிபதிகள் இடமாற்றம் தொடர்பாக, அதிகாரப்பூர்வ கொலீஜியம் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். கரியல் அண்மையில், குற்ற வியல் விவகாரங்களில் அரசையும்  போலீசாரையும் மிகக் கடுமையாகக் கேள்வி எழுப்பி இருந்தார் என்றும்  இதுவே அவரது இடமாற்றத்திற் கான காரணம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.