states

img

குஜராத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 12 தொழிலாளர்கள் பலி  

குஜராத்தில் உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.  

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் ஹல்வாட் தொழில்துறை பகுதிக்குள் சாகர் உப்பு தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று, சாக்கு மூட்டையில் உப்பு நிரப்பும் பணி நடந்துகொண்டிருந்தது. அப்போது அங்கிருந்து சுவர் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.  

இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும் இதில் பல தொழிலாளர்கள் சிக்கி இருப்பதால் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக அம்மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சரும் உள்ளூர் எம்எல்ஏவுமான பிரிஜேஷ் மெர்ஜா தெரிவித்தார்.    

இதையடுத்து இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளார். 

;