states

img

பாலியல் தொல்லை அளித்த ராப்பிடோ ஓட்டுநரிடம் இருந்து தப்பித்த பெண்! - சிசிடிவி காட்சிகள் வைரல்

பெங்களூருவில் பாலியல் தொல்லை அளித்த ராப்பிடோ ஓட்டுநரிடம் இருந்து பெண் தப்பிக்கும் சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 30 வயது பெண் ஒருவர், கடந்த 21-ஆம் தேதி தான் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து தனது வீட்டிற்குச் செல்ல ராப்பிடோவில் பதிவு செய்துள்ளார். அப்பெண்ணை அழைத்துச் செல்ல வந்த ராப்பிடோ ஓட்டுநர் தீபக்ராவ், ஓடிபி வேண்டும் என்று கூறி அந்த பெண்ணின் செல்போனை வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. பயணத்தின் போது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், வீட்டிற்கு செல்லாமல் வேறு வழியாக சென்றதால் வாகனத்தை நிறுத்தும்படி அந்தப் பெண் கூறியுள்ளார். 

ஆனால், தீபக் ராவ் பைக் வேகத்தை அதிகரித்து சென்றுள்ளார். இந்த நிலையில், ஓடும் வாகனத்திலிருந்து அந்தப் பெண் கீழே குதித்து தப்பித்துள்ளார். இதில் அந்தப் அப்பெண் காயமடைந்துள்ளார். இதன் சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்த பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராப்பிடோ ஓட்டுநரை தேடி வருகின்றனர்.