states

img

டிவிட்டர் நிறுவனத்திற்கு ₹50 லட்சம் அபராதம்!

டிவிட்டர் நிறுவனத்திற்கு ரு.50 லட்சம் அபராதம் விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிவிட்டர் கணக்குகளை முடக்கவும், டிவீட்களை  நீக்கவும் ஒன்றிய அரசு உத்தரவை எதிர்த்து ட்விட்டர் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்தது கர்நாடக உயர் நீதிமன்றம். மேலும், அந்நிறுவனத்திற்கு ரு.50 லட்சம் அபராதம் விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அபராதத் தொகையை 45 நாட்களுக்கு செலுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு 5,000 ரூபாய் வீதம் அபராத தொகையில் கூடும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளார்.