கர்நாடகா மாநிலத்தின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள முக்கிய திருவிழாக்களில் ஒன் றான வரலாற்றுச் சிறப்பு மிக்க மங் கலாதேவி கோவில் நவராத்திரி விழா அக்.15 அன்று முதல் அக்.24 வரை நடைபெறுகிறது. இந்த திருவிழா வையொட்டி நடை பெறும் கண்காட்சி யில் முஸ்லிம் வியாபாரிகள் பங்கேற்கக் கூடாது என கோயில் நிர்வாகம் முடிவு செய்து, மங்களூரு மாநகராட்சிக்குட்பட்ட கோயிலுக்கு எதிரே உள்ள ரதபீடி தெருவில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கும் பணியைத் தொடங்கி யுள்ளது. இந்த கோயில் நிர்வாகம் அதன் திருவிழாக்களை இங்கு ஏற் பாடு செய்து வருகிறது. கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்த நேரத்தில் மங்க லாதேவி கோவில் நவராத்திரி விழாவில் முஸ்லிம்கள் கடை வைக்க தடைவிதிக் கப்பட்டது. தற்போது மீண்டும் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், அதே நிலை நீடிப்பதாக தட்சிண கன் னடா மாவட்ட ஆணையரிடம் முஸ்லிம் வியாபாரிகள் வியாழனன்று புகார் மனு அளித்தனர்.