கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் 73.19 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன. இதைத் தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை கடந்த மே 13-ஆம் தேதி நடைபெற்றது. 113 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றி பெரும்பான்மை என்று இருந்த நிலையில், காங்கிரஸ் 131 தொகுதிகள் வெற்றி பெற்று பாஜக-வை தோற்கடித்தது. இந்த நிலையில், முதல்வர் பதவிக்கு மாநில காங்கிரஸ் கட்சியில் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த சூழலில், தற்போது அம்மாநில முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை முதல்வராக டி.கே.சிவகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் புதிய அரசு வரும் சனிக்கிழமை பதவியேற்க உள்ளது. இன்று மாலை காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் குயின்ஸ் ரோட்டில் இருக்கும் இந்திரா காந்தி பவனில் நடக்கிறது. இதை முன்னிட்டு அனைத்து எம்.எல்.ஏ-க்களும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று டி.கே.சிவகுமார் கடிதம் எழுதி இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் புதிய எம்.எல்.ஏ-க்கள், எம்.எல்.சி-க்கள், எம்.பி-க்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.