கர்நாடகாவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான கிரண் பயிற்சி விமானத்தில் இரண்டு விமானிகள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் திடீரென விமானம் விபத்துக்குள்ளானது. அப்போது, விமானத்தில் பயணித்த இரு விமானிகள் பாராசூட் மூலமாக குதித்து உயிர் தப்பியுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.