states

img

கர்நாடகத்தில் கோர விபத்து: 13 பேர் பலி

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட் டத்தின் சாவாடத்தி பகுதியில் உள்ள எல்லம்மா கோவிலுக்குச் சென்று விட்டு, தங்களது சொந்த ஊரான சிவமொக்காவிற்கு பக்தர்கள் குழு ஒன்று டெம்போ வேனில் திரும்பிக் கொண்டி ருந்தது. வெள்ளியன்று அதிகாலை 4 மணி யளவில் குண்டனஹள்ளி பகுதியில் உள்ள புனே - பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் சாலையில் நின்று கொண்டி ருந்த லாரி மீது டெம்போ வேன் அதி பயங்கர வேகத்தில் மோதி விபத்துக் குள்ளானது.

இந்த கோர விபத்தில் 2 குழந்தை கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். படுகாய மடைந்த 6க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணை யில் டெம்போ வேன் ஓட்டுநர் தூங்கிய தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.