states

img

ஹிஜாப் வழக்கு பிப்.14 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு  

இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய வழக்கை பிப்ரவரி 14 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகக் கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

கா்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம், குந்தாபுராவில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் ஹிஜாப் அணிய பள்ளி நிா்வாகம் தடை விதித்தது. அதனை மீறி ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் 6 பேரை கல்லூரியில் இருந்து கல்லூரி முதல்வா் வெளியேற்றினாா். இதனால் கல்லூரி வளாகத்துக்கு வெளியே இஸ்லாமிய மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைதொடர்ந்து இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தால் நாங்கள் காவித்துண்டு அணிந்து வருவோம் என சங்-பரிவார மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.    

இதன் காரணமாக கா்நாடகத்தில் உள்ள உயா்நிலைப் மேல்நிலை பள்ளிகள் அனைத்துக்கும் பிப். 9 ஆம் தேதிமுதல் 11 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து கா்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்நிலையில், கல்லூரி வளாகத்தில் சீருடையை மட்டும் அணிய வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவை எதிர்த்தும், ஹிஜாப் அணிவதற்கு அனுமதி கோரியும், குந்தாபுரா அரசு பி.யூ. கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள், கா்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.  

ஹிஜாப் வழக்கில் 3 நீதிபதிகள் கொண்ட கூடுதல் அமர்வை அமைத்து கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி உத்தரவிட்டார். இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வருகிற திங்கள்கிழமைக்கு(பிப்.14) ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.