“கர்நாடகத்தில் காங்கிரசின் வெற்றிக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், மக்களவைத் தேர்தலில் என்ன காத்திருக்கிறது என்பதற்கான முன்னோட்டமாக கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவை தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என்று, காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர் களை எச்சரிக்கை விரும்புகிறேன். ஏனெனில், 2012-இல் உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 80 இடங்களில் 73 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. அதேபோல 2018-இல் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் வென்ற காங்கிரஸ், 2019 மக்களவைத் தேர்தலில் மோசமான செயல்திறனையே காட்டியது” என்று பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.